பலூசிஸ்தான் சுதந்திரம் என அறிவிப்பு; கொடி, தேசிய கீதம், நாணயம் வெளியீடு
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் சுதந்திரக் கோரிக்கை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 'பலூசிஸ்தான் குடியரசு' என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பலூச் விடுதலை அமைப்பு தாங்கள் சுதந்திரம் பெற்றதாகக் கூறி, தேசிய கொடி, தேசிய கீதம் மற்றும் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், 'பலோச்சி பாலுஸ்' என்ற பெயரில் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையில் இருந்த சில பலூச் மற்றும் பஷ்தூன் இனத்தவர்கள் தங்களுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தான் படைகளை முழுமையாக வெளியேற்றும் நோக்கில் பெருமளவு ஆதரவாளர்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலூசிஸ்தானை சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், புதுடெல்லியில் தூதரகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
எனினும், சர்வதேச சட்டப்படி பலூசிஸ்தான் இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. புதிய நாடாக அங்கீகாரம் பெற ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஒப்புதலும், பிற நாடுகளின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் அவசியமாகும். தற்போதைய நிலவரப்படி எந்த நாடும் பலூசிஸ்தானை சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் 10 பொதுமக்கள் மற்றும் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் 4°C வரை வெப்பம் உயரும்; பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
18 மணி நேரங்கள் முன்பு
புரி ஜகந்நாதரின் அருள் பயணம்: ஜனாதிபதி பகிர்ந்த ஆன்மிக அனுபவங்கள்
18 மணி நேரங்கள் முன்பு
மணல் குவாரிகள் திறக்க தமிழக அரசு தீவிரம்; டெல்டா மாவட்டங்களில் எதிர்ப்பு வலுத்தது
1 நாட்கள் முன்பு
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விலகல்: அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் இணைந்தனர்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்