செய்திகள்
⚡ உடனடி செய்தி
ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச புகார்: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு; ஐகோர்ட்டில் அரசு தகவல்
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன லஞ்ச முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டுகளில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத் துறை (ED) புகார் எழுப்பியிருந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி மாதத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்தாததாக குற்றம்சாட்டி நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் நேரு மற்றும் தமிழக அரசு தரப்பில் மறு ஆய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்கு விசாரணையின் போது, பணி நியமன முறைகேடு தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை FIR பதிவு செய்துள்ளதாக அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அரசின் மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் ஜூன் 23ஆம் தேதி வரை, பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
36 நாள் நீண்ட நீட் போராட்டம் முடிவுக்கு வந்தது; சிஜேபி போராட்டத்தை வாபஸ் பெற்றது
6 மணி நேரங்கள் முன்பு
'அ.ம.மு.க. என் வசமே உள்ளது' – தினகரனுக்கு எதிராக மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் அதிரடி பேட்டி
7 மணி நேரங்கள் முன்பு
வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை? ரூ.10 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டம்
1 நாட்கள் முன்பு
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நன்றி: 'வீடியோவுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது'
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்