த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இணைந்தனர். இதில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நடிகர் ரவி மரியா உள்ளிட்டோர் த.வெ.க. உறுப்பினர்களாக இணைந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வர் விஜய், புதிதாக இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பிறகு பேசிய வைகைச்செல்வன், முதல்வர் விஜய் அனைவரின் கருத்துகளையும் கேட்டு ஏற்றுக்கொள்ளும் தலைவராக உள்ளார் என்று பாராட்டினார். காவிரி உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து விஜய் ஆர்வமாக கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அதிமுக தலைமையை விமர்சித்த வைகைச்செல்வன், அக்கட்சியின் இடத்தை தற்போது த.வெ.க. நிரப்பி வருவதாகவும், புதிய அரசியல் மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் உண்டியல் விவகாரம்: ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் அதிகரிக்கும் கவலை
1 மணி நேரங்கள் முன்பு
கவர்னரை சந்தித்த திமுக, அதிமுக: த.வெ.க. அரசு மீது குதிரைப் பேரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள்
1 மணி நேரங்கள் முன்பு
முதல்வர் குறித்து பேசிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது; நிபந்தனை ஜாமின்
1 நாட்கள் முன்பு
அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு முன் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; பழனிசாமி புதிய வியூகம்?
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்