பும்ரா கவனம் ஒருநாள் போட்டிகளுக்கு; 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய அணி திட்டம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு தனது கவனத்தை ஒருநாள் போட்டிகளின் பக்கம் திருப்ப உள்ளார். தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ள இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கியுள்ளது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு பும்ரா இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் அந்த காலத்தில் அவர் 21 டெஸ்ட் மற்றும் 21 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பும்ராவின் உடல்நலமும் செயல்திறனும் முக்கியமானவை என்பதால், அவரது பணிச்சுமையை கட்டுப்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 18 மாதங்களில் பும்ரா அதிகமாக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி 2027 உலகக்கோப்பை தயாரிப்பாக குறைந்தது 30 முதல் 35 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது. அந்த அணியில் பும்ரா முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.