Selvaperunthagai மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு | ஸ்ரீபெரும்புதூர் ரிசர்வ் தொகுதி விவகாரம்
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி (பட்டியலினத்திற்கான ஒதுக்கீடு) எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சி தலைவருமான Selvaperunthagai மீது தேர்தல் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜ தலைமை செய்தி தொடர்பாளர் Narayanan Thirupathy வெளியிட்ட அறிக்கையில், செல்வப்பெருந்தகையின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பது வெளிப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பட்டியலினத்திற்கான (SC Reserved) தொகுதி என்பதால், பட்டியலினத்தை சேர்ந்தவர்களே போட்டியிட தகுதியுடையவர்கள். மதம் மாற்றம் செய்த ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூக சலுகையை தொடர முடியாது என்பதே சட்டத்தின் நிலைப்பாடு என பாஜ குற்றம்சாட்டுகிறது.
சட்டம் சொல்வது என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஹிந்துவாக இருந்து கிறிஸ்துவர் அல்லது இஸ்லாமியராக மதம் மாறியவர், பட்டியலின சலுகைகளை பெற முடியாது என்பது பல தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.
2021 பிப்ரவரி 12 அன்று ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர், “இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர், தாழ்த்தப்பட்டவருக்கான சலுகைகளை பெற முடியாது; ரிசர்வ் தொகுதியில் போட்டியிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
பாஜ தரப்பில், செல்வப்பெருந்தகை உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதாகவும், அவரது வெற்றி செல்லாது என சட்ட ரீதியாக நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் வருமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.