உடனடி செய்தி

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் பெங்களூரு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதன் பின்னணி, மனித உரிமைகளை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இயங்கி வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனப்படும் அமைப்பு , அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் எண்ணங்களை மற்ற நாடுகளில் மறைமுகமாக செயல்படுத்தும் அடியாள் போல செயல்படுகிறது. இதுபோன்ற அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து பணம் கொண்டு வருவதற்கு சில வரைமுறைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. அதாவது ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு பணம் வந்தது காய் எந்த நோக்கத்திற்கு பயன் படுத்தப்பட்டது என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை பின்பற்றாததால் இந்த அமைப்பிற்கு வெளி நாட்டிலிருந்து பணம் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு இரண்டு வர்த்தக நிறுவனகளை நிறுவி அதன் மூலம் 36 கோடி வெளிநாட்டுப்பணத்தை பெற்றுள்ளது. அதை விசாரிக்கவே அமலாக்கத்துறை இந்த அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது. இப்படி குறுக்கு வழியிலாவது பணத்தை பெற்று நமது நாட்டில் மனித உரிமையை காப்பாற்ற பாடுபடுகிறது என்பது வியப்பு. அதே சமயம் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் புண்ணியவான்கள் யார் என்று நினைத்தால் மலைப்பு.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
23 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
23 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
23 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்