உடனடி செய்தி

வங்கதேசத்தில் ஹிந்து கோவிலில் குண்டு வீச்சு தாக்குதல்; அர்ச்சகர் உட்பட பலர் காயம்

வங்கதேசத்தில் ஹிந்து கோவிலில் குண்டு வீச்சு தாக்குதல்; அர்ச்சகர் உட்பட பலர் காயம்

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீப காலமாக சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் காலகட்டத்தில் கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் சொத்து அபகரிப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் பதிவாகின.

இதற்கிடையில், கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், கூமில்லா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் மாலை நேர பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கோவிலின் தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி கடுமையாக காயமடைந்தார். மேலும் அங்கு இருந்த சில பக்தர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்