பினாமி சொத்து வழக்குகளை விரைந்து முடிக்க தனி தீர்ப்பாயம். மோடி அரசு அதிரடி!!!
அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ அல்லது வரி காட்டாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளோ , தங்கள் பணத்தை அரசாங்கத்தின் கண்களில் இருந்து மறைத்து வைக்க கையாளும் ஒரு வழிதான் பினாமி சொத்து.
உதாரணத்திற்கு ஒரு அரசியல்வாதி ஊழல் பணத்தில் 5 கோடிக்கு ஒரு பங்களா வாங்கி அதை தனது வீட்டு வேலைக்காரர் பெயரில் பதிந்துகொள்வார் . (உங்களுக்கு சாதிக் பாட்ஸா நினைவுக்கு வரலாம்). இதனால் அரசாங்கத்தின் கண்களுக்கு அந்த அரசியல்வாதியின் 5 கோடி சொத்து தெரியாது.
இதுபோன்ற பினாமி சொத்து சம்பந்தமான வழக்குகளை விரைந்து முடிக்க மோடி அரசு கொண்டு வந்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கை தான் தனி தீர்ப்பாயம். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசாங்கம் எடுத்தது வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
பினாமி வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்ப்பாயமும், ஒரு மேல்முறையீட்டு ஆணையமும் அமைக்கப்படும். இதனால் பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்வதும், தவறு செய்தவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதைப்பதும் துரிதப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்