பினாமி சொத்து வழக்குகளை விரைந்து முடிக்க தனி தீர்ப்பாயம். மோடி அரசு அதிரடி!!!
அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ அல்லது வரி காட்டாமல் ஏமாற்றும் பெரும் பண முதலைகளோ , தங்கள் பணத்தை அரசாங்கத்தின் கண்களில் இருந்து மறைத்து வைக்க கையாளும் ஒரு வழிதான் பினாமி சொத்து.
உதாரணத்திற்கு ஒரு அரசியல்வாதி ஊழல் பணத்தில் 5 கோடிக்கு ஒரு பங்களா வாங்கி அதை தனது வீட்டு வேலைக்காரர் பெயரில் பதிந்துகொள்வார் . (உங்களுக்கு சாதிக் பாட்ஸா நினைவுக்கு வரலாம்). இதனால் அரசாங்கத்தின் கண்களுக்கு அந்த அரசியல்வாதியின் 5 கோடி சொத்து தெரியாது.
இதுபோன்ற பினாமி சொத்து சம்பந்தமான வழக்குகளை விரைந்து முடிக்க மோடி அரசு கொண்டு வந்துள்ள ஒரு அதிரடி நடவடிக்கை தான் தனி தீர்ப்பாயம். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி அரசாங்கம் எடுத்தது வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
பினாமி வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்ப்பாயமும், ஒரு மேல்முறையீட்டு ஆணையமும் அமைக்கப்படும். இதனால் பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்வதும், தவறு செய்தவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதைப்பதும் துரிதப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்