உடனடி செய்தி

பிரேசிலில் பேருந்து–லாரி மோதி கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் பேருந்து–லாரி மோதி கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள ரியோ கிராண்டே மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண் பேருந்தின் மீது கொட்டியதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்