செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறை புகார்: ‘பொய்யான குற்றச்சாட்டு’ என விளக்கம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக வலைதளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வருமான வரித்துறை கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ‘சோதனை’ என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சட்டவிரோதமாக தடுத்து வைத்து, அரசியல் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட விடாமல் செய்ததாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை அவர் ஊடக பேட்டிகளிலும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறையின் ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு கமிஷனர் ரஜிதா வெளியிட்ட அறிக்கையில், செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
மேலும், சமீப காலங்களில் செல்வப்பெருந்தகை அல்லது அவருடன் தொடர்புடைய எந்த இடங்களிலும் சோதனை நடத்தப்படவில்லை என்றும், அவரது நகர்வுகளை கட்டுப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கணக்கில் வராத பணப்புழக்கம் தொடர்பாக வழக்கமான நுண்ணறிவு அடிப்படையிலான சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவை செல்வப்பெருந்தகையுடன் எந்த தொடர்பும் இல்லாதவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி, அரசுத் துறைக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, செல்வப்பெருந்தகை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்