உடனடி செய்தி

சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – பெண் பயணி கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – பெண் பயணி கைது

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.93 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சுற்றுலா முடிந்து திரும்பிய நிலையில், அவரது உடைமைகளை சோதனை செய்த போது, தங்க பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 125 கிராம் ஆகும். அதன் சந்தை மதிப்பு ரூ.93 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பெண் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்