உடனடி செய்தி

சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி, தேனி, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் காய்ச்சல், கடும் மூட்டு வலி, தசை வலி மற்றும் உடல் அசதி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

இதையடுத்து, நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்தல், எலிசா பரிசோதனை வசதிகள் உறுதி செய்தல், நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைத்தல், கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்