உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மொத்தம் 4,72,319 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 74,089 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் நான்கு முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 419 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 23ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 83.68% வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதாவது 24,21,186 பேர் வாக்களித்துள்ளனர். இதில் பெண்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். மேலும் தபால் ஓட்டுகள் சுமார் 32,000 வரை பதிவாகி உள்ளன. 2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த முறை 17,691 ஓட்டுகள் அதிகரித்துள்ளன. ஆனால், 2024 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2.40 லட்சம் ஓட்டுகள் குறைந்துள்ளன. இந்த தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்ச ஓட்டுப்பதிவு ஆர்.கே.நகர் தொகுதியில் 90.56% ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், வில்லிவாக்கம், துறைமுகம், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்ததாவது: “மக்கள் அதிக அளவில் வாக்களிக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த தேர்தலை விட ஓட்டுப்பதிவு உயர்ந்துள்ளது” என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
11 மணி நேரங்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
11 மணி நேரங்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
1 நாட்கள் முன்பு
மோடி படகு சவாரி: மேற்குவங்க படகோட்டியை கட்டி அணைத்த சம்பவம்
மோடி படகு சவாரி: மேற்குவங்க படகோட்டியை கட்டி அணைத்த சம்பவம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்