சுட்டெரிக்கும் கோடை: 14 இடங்களில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வேலூரில் அதிகபட்சமாக 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம், திருச்சி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 104°F வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100°F-ஐ கடந்துள்ளது.
வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
11 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
11 மணி நேரங்கள் முன்பு
பழனிசாமி தலைமையை சி.வி.சண்முகம் சாடல்: அதிமுக எதிர்காலம் குறித்து கடும் எச்சரிக்கை
11 மணி நேரங்கள் முன்பு
100 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு தேவை: மோகன் பகவத்
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்