சுட்டெரிக்கும் கோடை: 14 இடங்களில் 100°F-ஐ கடந்த வெப்பநிலை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, வேலூரில் அதிகபட்சமாக 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம், திருச்சி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் தலா 104°F வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை நுங்கம்பாக்கம், ஈரோடு, கரூர், காரைக்கால், மதுரை, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை 100°F-ஐ கடந்துள்ளது.
வெப்பநிலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும், போதிய அளவு தண்ணீர் அருந்தவும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சிபிஎஸ்இ விடைத்தாள் கசிவு விவகாரம் | பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட நிர்வாகம்
15 மணி நேரங்கள் முன்பு
வேலுமணி - முனுசாமி மோதல் | அதிமுகவில் புதிய பதவி சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா; இன்று ராஜினாமா
4 நாட்கள் முன்பு
தமிழக நலத்திட்டங்களுக்கு நிதி கோரி பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்