உடனடி செய்தி

டாக்டர்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்கிறது திமுக அரசு – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

டாக்டர்கள் கோரிக்கைகளை அலட்சியம் செய்கிறது திமுக அரசு – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசாணை எண் 354 அமல்படுத்தப்படாததால் அரசு டாக்டர்கள் நான்கரை ஆண்டுகளாக போராடி வருவதாக அவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு இன்று உரிய ஊதியமும், DACP ஊதியமும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை கைது செய்வதும், பணியிட மாற்றம் செய்வதும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், போராட்டத்தில் உயிரிழந்த டாக்டர் மணிக்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

அரசு டாக்டர்களின் நலன் பாதுகாக்கப்படாவிட்டால், தமிழக மக்களின் ஆரோக்கியமே பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், உடனடியாக அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்