உடனடி செய்தி

தேசிய நலனே இந்தியாவின் எரிசக்தி கொள்கைக்கு அடிப்படை : விக்ரம் மிஸ்ரி

தேசிய நலனே இந்தியாவின் எரிசக்தி கொள்கைக்கு அடிப்படை : விக்ரம் மிஸ்ரி

இந்தியாவின் எரிசக்தி தொடர்பான அனைத்து முடிவுகளும் நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் மற்றும் எரிவாயு கொள்முதல் குறித்து எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து முடிவு எடுப்பதாக கூறினார். எண்ணெய் கிடைக்கும் அளவு, சர்வதேச அரசியல் சூழல், விலை மாற்றங்கள், நிதி சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணிகள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

இந்தியா தற்போது 80 முதல் 85 சதவீதம் வரை எண்ணெய் மற்றும் காஸ் இறக்குமதியை சார்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் எரிசக்தி கொள்கையில் கூடுதல் கவனம் தேவை என்றார்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், நுகர்வோர் நலனையும் சமநிலைப்படுத்தி எரிசக்தி துறையில் முடிவுகள் எடுக்கப்படுவது இயல்பானதே என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
கோரிக்கைகளை ஏற்ற கட்சிகளுக்கே ஹிந்துக்கள் ஓட்டு: ஹிந்து உரிமை மீட்பு மாநில மாநாட்டில் தீர்மானம்
19 மணி நேரங்கள் முன்பு
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
கோவை வாக்காளர்களுக்கு பரிசு மழை? வெள்ளி நாணயம், டிவி வரை கிப்ட் என அரசியல் போட்டி
19 மணி நேரங்கள் முன்பு
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
சபரிமலை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் சந்தேக பரிவர்த்தனை: நீதிமன்றத்திற்கு அறிக்கை
19 மணி நேரங்கள் முன்பு
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
ஈரான் தற்கொலைப் படகு தாக்குதல்: அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பலில் இந்தியர் பலி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்