இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மீது அமெரிக்கா விதித்து வந்த மொத்த 50 சதவீத வரிவிதிப்பு, தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதன் காரணமாக, அமெரிக்கா கூடுதல் 25 சதவீத அபராத வரியை விதித்திருந்தது. இதன் காரணமாக இந்திய ஏற்றுமதி பொருட்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக முடிவுக்கு வந்தது. கூடுதல் அபராத வரி முழுமையாக நீக்கப்பட்டு, அடிப்படை வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்