ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் களப்பணி: அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்குகிறார்
பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜூலை 1 முதல் மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களுடன் இணைந்து களப்பணிகளை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கோவையில் அப்துல் கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறநெறி மற்றும் அரசியல் மையம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த மையத்தின் மூலம் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு அரசியல் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தரப்பினரும் தன்னார்வலர்களாக இணைந்து வருவதாகவும், "நாம் இந்தியர்கள், நாம் தமிழர்கள்" என்ற ஒற்றுமை கருத்துடன் இன, மத, ஜாதி வேறுபாடுகளை கடந்து மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், 'We The Leaders' இயக்கத்தில் இணைய விரும்புவோரும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ஜூலை மாதம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு களப்பணிகளும், ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவதை விட மக்கள் பங்கேற்புடன் நேரடி சமூகப் பணிகளில் ஈடுபடுவதே இயக்கத்தின் நோக்கம் என்றார்.
மேலும், ஜூலை முதல் வாரத்தில் தன்னார்வலர்களுக்கான புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
திமுக கூட்டணி தொடருமா? கூட்டணி அரசியலை மறுபரிசீலனை செய்ய ஸ்டாலின் சுட்டிக்காட்டு
16 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்: போராட்டக்காரர்கள் மீது ராணுவ அத்துமீறல் குற்றச்சாட்டு
16 மணி நேரங்கள் முன்பு
உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ, மொராக்கோ, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா அணிகள் அசத்தல் வெற்றி
16 மணி நேரங்கள் முன்பு
கையகப்படுத்திய நிலம் பழநி கோயிலுக்கே மாற்றப்படும்; உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்