உடனடி செய்தி

கேரளாவின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

கேரளாவின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக மாநில கால்நடை துறை அமைச்சர் சிஞ்சு ராணி தெரிவித்துள்ளார்.

பறவை காய்ச்சல் சந்தேகத்தின் அடிப்படையில் கோழிப்பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வின் முடிவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் நெடுமுடி, செருதனா, கருவட்டா, புன்னப்ரா தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் குருப்பந்தரா, கல்லுபுரயக்கல், வெல்லூர் பகுதிகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நிலைமையை மதிப்பீடு செய்து வரும் கால்நடை துறை அதிகாரிகள், தற்போது கோழி இறைச்சி மற்றும் முட்டை பயன்பாட்டுக்கு எந்தத் தடையும் இல்லை என தெரிவித்துள்ளனர். தேவையெனில் இழப்பீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
2 மணி நேரங்கள் முன்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
2 மணி நேரங்கள் முன்பு
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
3 மணி நேரங்கள் முன்பு
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்