உடனடி செய்தி

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச முறைகேடுகளை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2024–2025 ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக 171 அரசு அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 129 அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனுடன், 199 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 681 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வருவாய் துறையைச் சேர்ந்த 92 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி துறையைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

மேலும், 2023–2024 ஆண்டில் 94 அரசு அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றிருந்த நிலையில், 2024–2025 ஆண்டில் 126 அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 32 பேர் அதிகமாகும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்