உடனடி செய்தி

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

2024–25ல் 126 அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச வழக்கில் சிறை தண்டனை

மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச முறைகேடுகளை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

2024–2025 ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக 171 அரசு அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 129 அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனுடன், 199 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 681 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, வருவாய் துறையைச் சேர்ந்த 92 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி துறையைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

மேலும், 2023–2024 ஆண்டில் 94 அரசு அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றிருந்த நிலையில், 2024–2025 ஆண்டில் 126 அதிகாரிகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 32 பேர் அதிகமாகும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்