செய்திகள்
⚡ உடனடி செய்தி
பழநி கோவில் நில மோசடி: சிபிசிஐடி அதிரடி; 4 பேர் கைது
பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, அறக்கட்டளை தொடர்புடைய முருகதாஸ், அன்வர்தீன் உள்ளிட்ட நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நில மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை சார் பதிவாளர், கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள், சாட்சிகள், புரோக்கர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட 82 பேரிடம் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி நிலம் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வழக்கில், மேலும் பலர் விசாரணை வளையத்துக்குள் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டில்லியில் கனமழை கொட்டியது: சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கடும் போக்குவரத்து பாதிப்பு
6 மணி நேரங்கள் முன்பு
தமிழக மாணவர்களின் ஒழுக்கம் இந்தியாவுக்கே முன்மாதிரி; பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அர்லேக்கர் பாராட்டு
6 மணி நேரங்கள் முன்பு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
1 நாட்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்