உடனடி செய்தி

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 12 பேர் படுகாயம்

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி, 12 பேர் படுகாயம்

மெக்சிகோவின் குவானாஜீவாடோ மாகாணத்தில் உள்ள உள்ளூர் கால்பந்து மைதானத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. தாக்குதலில் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு குவானாஜீவாடோ மாகாண மேயர் சீசர் பிரிட்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
18 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
18 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
18 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்