புதுடில்லியில், தேசிய உருது மொழி மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய புத்தகத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
இந்த புத்தகம், 2004 முதல் 2015 வரை பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரைகளின் தொகுப்பாகும்.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தர்மேந்திர பிரதான், பிரதமர் மோடியின் உரைகள் தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான அவரது தொலைநோக்கு பார்வையை தெளிவாக வெளிப்படுத்துகின்றன எனக் கூறினார்.
மேலும், “அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் முயற்சிக்கும்” என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி செயல்பட்டு வருவதை இந்த உரைகள் ஆவணப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்