உடனடி செய்தி

தர்மம் வழிநடத்தும் வரை பாரதம் விஸ்வகுரு – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

தர்மம் வழிநடத்தும் வரை பாரதம் விஸ்வகுரு – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

தர்மம் நிலைத்திருக்கும் வரை பாரத நாடு உலகிற்கு வழிகாட்டும் விஸ்வகுருவாகத் தொடரும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஆன்மிக ஞானம் உலகில் வேறு எங்கும் இல்லை என்றும், அது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பெரும் பாரம்பரியம் என்றும் கூறினார்.

தர்மம் என்பது எந்த ஒரு மதத்திற்கும் மட்டும் உரியது அல்ல; அது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் நெறிமுறை என அவர் விளக்கினார். மனித வாழ்க்கை மட்டுமின்றி இயற்கையும் தர்மத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது என்றும், ஒவ்வொரு உயிருக்கும் தனித்த கடமை தர்மத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், சமூகத்தில் இருந்து ஜாதியை ஒழிக்க வேண்டுமெனில், முதலில் மனிதர்களின் மனங்களில் இருந்து ஜாதி எண்ணம் அகற்றப்பட வேண்டும் என்றும், அது நிகழ்ந்தால் பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில் ஜாதி முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்