உடனடி செய்தி

மும்பையில் கனமழை கொந்தளிப்பு: 10 பேர் பலி; ரெட் அலர்ட் அறிவிப்பு

மும்பையில் கனமழை கொந்தளிப்பு: 10 பேர் பலி; ரெட் அலர்ட் அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறநகர் ரயில் சேவைகளும் தடைபட்டுள்ளன. கனமழையால் மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மும்பை பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கர்ஜத்–லோனாவாலா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் மும்பை–புனே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் விழுந்த பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்கட் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என்பதால், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பழனிசாமி அதிரடி? டெல்லிக்கு செல்லும் ஊழல் ஆவணங்கள் என தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பழனிசாமி அதிரடி? டெல்லிக்கு செல்லும் ஊழல் ஆவணங்கள் என தகவல்
13 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு தாவல்: தி.மு.க. தலைமை ரகசிய சர்வே நடத்துகிறது
அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு தாவல்: தி.மு.க. தலைமை ரகசிய சர்வே நடத்துகிறது
14 மணி நேரங்கள் முன்பு
உலகக் கோப்பையில் 250 கோல்கள்: புதிய சாதனையுடன் தொடரும் கோல் மழை
உலகக் கோப்பையில் 250 கோல்கள்: புதிய சாதனையுடன் தொடரும் கோல் மழை
14 மணி நேரங்கள் முன்பு
த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
த.வெ.க.வில் இணைந்த ஜெகத்ரட்சகன் மகன், வைகைச்செல்வன்; புதிய நிர்வாகிகளை சந்தித்த முதல்வர் விஜய்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்