செய்திகள்
⚡ உடனடி செய்தி
உலகக் கோப்பையில் 250 கோல்கள்: புதிய சாதனையுடன் தொடரும் கோல் மழை
நடப்பு பிபா உலகக் கோப்பை தொடரில் கோல்கள் மழையாக பொழிந்து வரும் நிலையில், புதிய மைல்கல்லாக 250 கோல்கள் பதிவாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'ரவுண்டு-32' போட்டியில் எகிப்தின் எமாம் அஷூர் அடித்த கோல், இந்த தொடரின் 250வது கோலாக அமைந்தது. இன்னும் பல போட்டிகள் மீதமுள்ளதால், மொத்த கோல் எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதிக கோல்கள் அடித்த அணிகளின் பட்டியலில் 14 கோல்களுடன் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகள் தலா 11 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தனிநபர் கோல் பட்டியலில் பிரான்சின் கிலியன் எம்பாப்வே மற்றும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தலா 7 கோல்களுடன் முதலிடத்தைப் பகிர்ந்து வருகின்றனர். நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி கேன் தலா 5 கோல்களுடன் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பையில் இதுவரை மூன்று ஹாட்ரிக் சாதனைகள் பதிவாகியுள்ளன. அதேசமயம், 14 சொந்த கோல்கள் (Own Goals) பதிவாகி புதிய சாதனையும் உருவாகியுள்ளது. எகிப்தின் முகமது ஹானி ஒரே தொடரில் இரண்டு சொந்த கோல்கள் அடித்த முதல் வீரராக பதிவாகியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான விக்ரம்-1 வெற்றி
5 மணி நேரங்கள் முன்பு
தவெகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை? அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
5 மணி நேரங்கள் முன்பு
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
5 மணி நேரங்கள் முன்பு
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
5 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்