உடனடி செய்தி

மியான்மரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் : கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

மியான்மரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் : கோல்கட்டா, டாக்காவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்யாப் பகுதியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவிலும் உணரப்பட்டன. திடீரென ஏற்பட்ட அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். அதேபோல் வங்கதேசத்தில் இது இரண்டாவது முறையாக உணரப்பட்ட நிலநடுக்கமாகும். தற்போதுவரை உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
19 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
19 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்