நாசிக்கில் ஐடி நிறுவனத்தில் பெண்களுக்கு மத அழுத்தம்: அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சம்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த சில ஆண்டுகளாக குழு தலைவர்கள் மூலம் பாலியல் தொல்லை, உடை மற்றும் உடல் குறித்து அவமதிப்பான கருத்துக்கள் கூறப்பட்டதோடு, மத சார்ந்த அழுத்தங்களும் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், சில ஊழியர்களை குறிப்பிட்ட மத வழக்கங்களை பின்பற்ற கட்டாயப்படுத்தியதோடு, உணவு பழக்கங்களிலும் தலையீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிலருக்கு திருமண வாக்குறுதி அளித்து தவறான முறையில் அணுகியதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பும் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பந்தப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொழிலிடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சபரிமலை வழக்கு: “மக்களின் நம்பிக்கையை தவறென அறிவிப்பது சவால்” – உச்ச நீதிமன்றம்
19 மணி நேரங்கள் முன்பு
நாற்காலிக்காக அல்ல, தமிழ்நாட்டுக்காக வந்தேன்: சேலத்தில் கமல் ஹாசன் உரை
19 மணி நேரங்கள் முன்பு
திருச்சி அருகே அவமரியாதை விவகாரம்: இளம்பெண் தற்கொலை – 6 பேர் கைது
19 மணி நேரங்கள் முன்பு
நாகர்கோவிலில் இன்று நரேந்திர மோடி ரோடு ஷோ; எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்