உடனடி செய்தி

150 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்புயல்: நியூயார்க் மற்றும் வடகிழக்கு அமெரிக்காவில் அவசரநிலை

150 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்புயல்: நியூயார்க் மற்றும் வடகிழக்கு அமெரிக்காவில் அவசரநிலை

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது. குறிப்பாக New York மாநிலத்தில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

National Weather Service கடுமையான காற்றுடன் கூடிய 'ப்ளிசார்டு' எச்சரிக்கையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளது. பல பகுதிகளில் 3 அடி உயரம் வரை பனி குவிந்துள்ளது.

New Jersey மாநிலத்திலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் தேவையற்ற வெளியேற்றங்களைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

New York City நகரின் முக்கிய விமான நிலையங்களில் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா முழுவதும் 13,000-க்கும் அதிகமான விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் Massachusetts, Connecticut, Delaware, Maryland மற்றும் Virginia ஆகிய மாநிலங்களிலும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதமடைந்ததால் வடகிழக்கு அமெரிக்காவில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவசர சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
14 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
14 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
15 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்