உடனடி செய்தி

நீட் மறுதேர்வு அறிவிப்பு: மருத்துவமா, பொறியியலா? மாணவர்கள் கடும் குழப்பம்

நீட் மறுதேர்வு அறிவிப்பு: மருத்துவமா, பொறியியலா? மாணவர்கள் கடும் குழப்பம்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்குத் தயாராகியுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் முக்கிய முடிவெடுக்கும் கட்டத்தில் குழப்பத்தை எதிர்கொண்டுள்ளனர். ஜே.இ.இ. மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஏற்கனவே முடிந்து, ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான கவுன்சிலிங் செயல்முறை நடைபெற்று வருகிறது. இதே நேரத்தில் நீட் மறுதேர்வு அறிவிப்பு வெளியாகியிருப்பது, உயிரியல் மற்றும் கணிதம் இரண்டையும் படித்த மாணவர்களின் எதிர்காலத் திட்டங்களில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மருத்துவம் முதன்மை இலக்காக இருக்கும் மாணவர்கள், நீட்டில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பை தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு நீட் முடிவுகள் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளதால், ஜே.இ.இ. கவுன்சிலிங்கில் இடத்தை உறுதி செய்யலாமா அல்லது மருத்துவ வாய்ப்புக்காக காத்திருக்கலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தால், சேர்க்கையை உறுதி செய்ய குறிப்பிடத்தக்க அளவு முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும். பின்னர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக அந்த இடத்தை ரத்து செய்தால், மாணவர்களுக்கு நிதி இழப்பும், காலியாகும் இடங்களை நிரப்புவதில் நிர்வாக சிக்கல்களும் ஏற்படலாம் என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்திலும் பொறியியல் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளதால், இதே பிரச்னை மாநில அளவிலும் எதிரொலிக்கக்கூடும். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முன்பணம் திருப்பி வழங்குதல் மற்றும் காலியிடங்களை நிரப்புதல் தொடர்பாக சிறப்பு நடைமுறைகளை அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்: நிர்வாகிகள் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்: நிர்வாகிகள் வலியுறுத்தல்
17 மணி நேரங்கள் முன்பு
திருமாவளவன் கவலை: வி.சி.க. நிர்வாகிகள் கட்சி தாவுவதை தடுக்க வேண்டுகோள்?
திருமாவளவன் கவலை: வி.சி.க. நிர்வாகிகள் கட்சி தாவுவதை தடுக்க வேண்டுகோள்?
17 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் கருத்துக்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் கருத்துக்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு
17 மணி நேரங்கள் முன்பு
இண்டி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக புறக்கணிப்பு; வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
இண்டி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக புறக்கணிப்பு; வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
17 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்