உடனடி செய்தி

காவிரி நீர் திறப்பில் கர்நாடகா மறுப்பு: தமிழகம் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு

காவிரி நீர் திறப்பில் கர்நாடகா மறுப்பு: தமிழகம் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய அளவு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிட்டு தற்போது நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு தெரிவித்தது. தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் முதல் ஜூலை வரை வழங்க வேண்டிய நீருடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். இதனால் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இரு மாநிலங்களின் வாதங்களையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், மழைப்பொழிவு மற்றும் அணைகளின் நீர்வரத்தை மேலும் ஒரு வாரம் கண்காணித்து, பின்னர் அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம் என்று அறிவித்தது. இதற்காக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக தமிழக அரசு சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கைதான திமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்காத உதயநிதி? கட்சிக்குள் அதிருப்தி அதிகரிப்பு
கைதான திமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்காத உதயநிதி? கட்சிக்குள் அதிருப்தி அதிகரிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
டெல்லி போராட்டம்: நீட் எதிர்ப்பு போராட்டமா? அரசியல் சர்ச்சையா?
டெல்லி போராட்டம்: நீட் எதிர்ப்பு போராட்டமா? அரசியல் சர்ச்சையா?
1 மணி நேரங்கள் முன்பு
நீட் விவகாரம்: பிரதமர் இல்லம் முன் போராட்டம்; ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டு விடுதலை
நீட் விவகாரம்: பிரதமர் இல்லம் முன் போராட்டம்; ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டு விடுதலை
1 நாட்கள் முன்பு
தமிழக சிலைகள் உட்பட 615 அரிய தொல்பொருட்கள் மீட்பு; மத்திய அரசின் நடவடிக்கை
தமிழக சிலைகள் உட்பட 615 அரிய தொல்பொருட்கள் மீட்பு; மத்திய அரசின் நடவடிக்கை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்