255 கோடி மதிப்புள்ள நீரவ்மோடியின் சொத்துகள் முடக்கம்
வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த குஜராத் மாநிலத்தின் தொழிலதிபர் நீரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு வாங்கிய கடனை கட்டாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடியின் மீது தொடுக்கப்பட்ட புகார் ஆகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையினர் ஹாங்காங்கில் உள்ள நீரவ்மோடியின் நகைக்கடை மற்றும் அதிலுள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்கி உள்ளது.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 255 கோடி வரும் என்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு முன்பு நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
11 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
11 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
11 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்