255 கோடி மதிப்புள்ள நீரவ்மோடியின் சொத்துகள் முடக்கம்
வங்கி கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த குஜராத் மாநிலத்தின் தொழிலதிபர் நீரவ் மோடியின் ஹாங்காங் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு வாங்கிய கடனை கட்டாமல் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடியின் மீது தொடுக்கப்பட்ட புகார் ஆகும். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் அமலாக்கத்துறையினர் ஹாங்காங்கில் உள்ள நீரவ்மோடியின் நகைக்கடை மற்றும் அதிலுள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்கி உள்ளது.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 255 கோடி வரும் என்றும் அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர். இதற்கு முன்பு நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தொடர்புடைய செய்திகள்
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்