உடனடி செய்தி

மாநிலங்களுக்கு நிதி குறைப்பு இல்லை: மத்திய பட்ஜெட் விவாதத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

மாநிலங்களுக்கு நிதி குறைப்பு இல்லை: மத்திய பட்ஜெட் விவாதத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடில்லி: எந்த மாநிலத்திற்கும் அல்லது அரசு திட்டங்களுக்கும் நிதி நிறுத்தப்படவோ குறைக்கப்படவோ இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.

ராஜ்யசபாவில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த அவர், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்றார். கடந்த காலங்களில் கஜானாவில் இருந்து வெளியேறிய தொகையை அடிப்படையாக வைத்து செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அந்த தொகை முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்பது சரியாக கண்காணிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

தற்போது செலவினங்கள் அனைத்தும் கண்காணிப்பு முறையில் பதிவு செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மட்டுமே நிதி வெளியிடப்படுகிறது. இதை நிதி குறைப்பு என கூறுவது தவறான புரிதல் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், மத்திய நிதி என்பது ஒவ்வொரு வரி செலுத்துவோரின் உழைப்பின் பலன் என்பதால், அதனை பொறுப்புடன் பயன்படுத்துவது அரசின் கடமை என்றும் தெரிவித்தார். அதிகமானோர் வருமானவரி செலுத்துவது நடுத்தர மக்களுக்கு சுமையாக அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பாகும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்