உடனடி செய்தி

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம்

பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை குறைப்பு – எரிபொருள் விலை உயர்வு காரணம்
மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் உலகளவில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கடுமையாக உணரப்படுகிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு 50 சதவீதம் வரை குறைக்கப்படும். அதோடு, அடுத்த இரண்டு மாதங்களில் 60 சதவீத அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் சேமிப்புகள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்