மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் பல மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பல மாதங்களாக கணைய புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர் பரீக்கர் நேற்று (17 ம் தேதி )இரவு காலமானார்.

நேர்மையான, எளிமையானவர், இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது தான் முதன் முறையாக (Surgical Strike) துல்லிய தாக்குதல் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தியது . மனோகர் பரீக்கரின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பலரும் தங்கள் இரங்கலில் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்