உடனடி செய்தி

மதராஸாக்களை மூட வேண்டும் - மோடிக்கு வஃபு வாரியத் தலைவர் கடிதம்

மதராஸாக்களை மூட வேண்டும் - மோடிக்கு வஃபு வாரியத் தலைவர் கடிதம்

நாடெங்கிலும் உள்ள மதராஸா பள்ளிகளை இழுத்து மூட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷியா வஃபு வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீவிரவாத செயல்களை மதராஸா பள்ளிகள் ஊக்குவித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு ரிஸ்வி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டில் உள்ள அனைத்து மதராஸாக்களையும் இழுத்து மூட வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், தீவிரவாத செயல்களுக்கான சதித்திட்டங்களை தீட்டும்போது, அதைச் செய்வதற்கான நபர்களாக முதலில் சிறுவர்களைத்தான் உலகெங்கிலும் குறி வைக்கின்றனர். ஐ.எஸ். பயங்கரவாதம் அதிகரித்து வரும் சூழலில், அது இந்தியாவிலும் பரவக் கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணத்தைக் காட்டி சிறுவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் ஈர்த்து வருகின்றனர். இஸ்லாமியக் கல்வி என்ற பெயரில் தீவிரவாத கொள்கைகளை அவர்கள் கற்பித்து வருகின்றனர். அனைத்து மதராஸாக்களையும் உடனடியாக இழுத்து மூடாவிட்டால், அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் இருப்பார்கள். நல்ல கல்வியையும், மத நல்லிணக்கத்தையும் வழக்கமான பள்ளிகளில்தான் சிறுவர்கள் கற்க முடியும். அதே சமயம், அவர்களது தனிப்பட மத நம்பிக்கைகளையும் பின்பற்ற முடியும் என்று ரிஸ்வி கூறியுள்ளார்.

ஐ.எஸ். பாணியிலான தீவிரவாத போதனைகளை கற்பித்ததாக லூதியானாவில் மௌல்வி ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 17ம் தேதி கைது செய்த நிலையில், ஷியா வஃபு வாரியத் தலைவரின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
18 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
18 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
18 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்