உடனடி செய்தி

குடியரசு தின அணிவகுப்பில் வரலாறு படைத்த சிம்ரன் பாலா – ஆண்கள் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி

குடியரசு தின அணிவகுப்பில் வரலாறு படைத்த சிம்ரன் பாலா – ஆண்கள் படையை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி

இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவில் புதிய வரலாறு உருவாகியுள்ளது. டில்லி கர்தவயா பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், சிஆர்பிஎப் ஆண்கள் படைப்பிரிவை 26 வயதான இளம் பெண் அதிகாரி சிம்ரன் பாலா தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல்முறையாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த சிம்ரன் பாலா, அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான பணிக்கு பெயர் பெற்றவர். ரஜோரி மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎப் அமைப்பில் அதிகாரியாக இணைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் உள்ள காந்திநகர் பெண்கள் கல்லூரியில் அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற அவர், 2025ஆம் ஆண்டு சிஆர்பிஎப் பணியில் சேர்ந்தார். முதன்முறையாக சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட அவர், பயிற்சியின் போது சிறந்த அதிகாரி என சான்றிதழ் பெற்றுள்ளார்.

சிம்ரன் பாலாவின் இந்த சாதனை, பெண்களின் திறன் மற்றும் தலைமைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
22 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
22 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
22 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்