உடனடி செய்தி

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த  தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

ஊழல் காரணமாக தமிழகத்தில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி தான் என்றும், அந்தக்கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் ஊழல் குறித்து பேசவே தகுதியே அற்றவர் எனவும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளுத்து வாங்கினார்.

தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் பல்வேறு இடங்களில் பரப்புரையை மேற்கொண்டார். கிண்டி, திருவான்மியூர், மயிலாப்பூர், எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர், ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி என்றார். இதனால் ஊழல் குறித்து பேசவே ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றார்.

வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என கூறிய முதல்வர், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்