உடனடி செய்தி

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

"ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த  தகுதியும் இல்லை”முதலமைச்சர் பழனிசாமி விலாசல்

ஊழல் காரணமாக தமிழகத்தில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி தான் என்றும், அந்தக்கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் ஊழல் குறித்து பேசவே தகுதியே அற்றவர் எனவும் முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளுத்து வாங்கினார்.

தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் பல்வேறு இடங்களில் பரப்புரையை மேற்கொண்டார். கிண்டி, திருவான்மியூர், மயிலாப்பூர், எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர், ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி என்றார். இதனால் ஊழல் குறித்து பேசவே ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றார்.

வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறிய முதல்வர், மக்களுக்கு பயன்தரும் பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என கூறிய முதல்வர், நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
2 நாட்கள் முன்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் சவால்கள் அதிகரிக்கின்றன!
2 நாட்கள் முன்பு
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
போர் நிறுத்தம் பிறகு: 2 மாத இடைவெளிக்குப் பின் ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்
2 நாட்கள் முன்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் பணப்பட்டுவாடா சர்ச்சை: அமைச்சர் கீதா ஜீவனை குறித்த வீடியோ பரபரப்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்