4 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை!!!
கோவில்பட்டியில் 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதை அமைத்து சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.
பொதுவாகவே நமது நாட்டில் எந்தவொரு அரசாங்க பனி நிறைவடைய சில வருடங்கள் தேவைப்படும். இதுதான் இதுவரை நமக்கு கிடைத்த அனுபவங்கள்.
அதிசயம் ஆனால் உண்மை என்பது போல 4 மணி நேரத்தில் ரயில் பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைத்து , உடனடியாக போக்குவரத்து செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் லட்சுமி மில் அருகே உள்ள ரயில் பாதையை கடக்க மேம்பாலம் அமைத்த பின்னரும் , அங்கே இருந்த கிராஸ்ஸிங்கை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கிராஸ்ஸிங்கை அகற்றினால் தங்கள் ஊருக்கு செல்ல அதிகமான தொலைவு பயணிக்க வேண்டும் என்பது அவர்களது கவலை.
அதனை போக்குவதற்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது ரயில்வே துறை. ஆனால் ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதனால் மிகக்குறைந்த கால அவகாசத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
எனவே மிகைத்திறமையாக 4 மணி நேரத்தில் சுரங்கப்பாதையை முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் அற்பணிக்கப்பட்டது .
[embed]https://www.youtube.com/watch?v=oKEMfibSqgA[/embed]
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்