தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ‘நாளை நமதே – தமிழ்நாடும் நமதே’ தெருமுனை பிரசார கூட்டத்தில் மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும், கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தையும் எடுத்துக்காட்டினார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கொலைகள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், அரசின் பல திட்டங்கள் மக்கள் நலனுக்கு பயனளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். வரும் தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மின் தடை விவகாரம்: ‘பியூஸ் கேரியர்’ காரணமா? பழனிசாமி கடும் விமர்சனம்
20 மணி நேரங்கள் முன்பு
போக்சோ வழக்கில் மதபோதகருக்கு 7 ஆண்டு சிறை | திருநெல்வேலி நீதிமன்ற தீர்ப்பு
20 மணி நேரங்கள் முன்பு
ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் புகார்; சிங்கப்பெண் படை மீது இபிஎஸ் கேள்வி
20 மணி நேரங்கள் முன்பு
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்