உடனடி செய்தி

தொடரும் அதிரடி வேட்டை: நாகையில் ஹாரிஸ் முகமது, அசன் அலி இரு தீவிரவாதிகள் கைது!

தொடரும் அதிரடி வேட்டை: நாகையில் ஹாரிஸ் முகமது, அசன் அலி இரு தீவிரவாதிகள் கைது!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று நாகையில் இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பல மணிநேர சோதனைக்குப் பிறகு, செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை அவர்கள் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னை கொண்டு சென்றனர்.

அவர்கள் இருவரும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்