Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 12 Feb 2026

ஈரானில் போராட்ட அடக்குமுறை: உயிரிழப்பு 7,000 கடந்தது – அதிபர் மன்னிப்பு

டெஹ்ரான்: பொருளாதார நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய நாடு தழுவிய போராட்டங்கள் கடுமையான வன்முறையாக மாறின. இந்த போராட்டங்களை அடக்க அரசு துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெருமளவிலான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த அடக்குமுறையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான அணுசக்தி பதற்றம் மற்றும் அமெரிக்காவுடன் உள்ள அணு ஒப்பந்த விவகாரம் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் பதற்றம் தொடர்ந்து நிலவுகிறது

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்