டி-20 உலகக்கோப்பை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய பிரதமர் மோடி
புதுடில்லி: ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்திய அணியை பாராட்டினார்.
அவர் தனது பதிவில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி வீரர்களின் திறமை, உறுதி மற்றும் குழு ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டு. போட்டி முழுவதும் இந்திய அணி அசாதாரண மனவலிமையையும் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
மேலும் இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும், இந்திய அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.