அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயார் – அண்ணாமலை
கே. அண்ணாமலை கோவையில் நிருபர்களை சந்தித்தபோது, அடுத்த தேர்தலில் கட்சி வாய்ப்பு அளித்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்வில் கலந்து கொண்ட அண்ணாமலை, வேலுமணி மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு பெற்றவர் என்றும், அவர் மிகுந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றால், கோவை வளர்ச்சிக்கு வேலுமணி முக்கிய பங்காற்றுவார் என்றார். கோவை நகரில் மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உடன் ஆலோசனை நடந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த தேர்தலில் தாம் வேட்பாளராக இல்லாததால், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
21 மணி நேரங்கள் முன்பு
கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
21 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை; விதிமீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
21 மணி நேரங்கள் முன்பு
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்