உடனடி செய்தி

பீஹார் 5, ஒடிஷா 2 இடங்கள்: ராஜ்யசபா தேர்தலில் பாஜக முன்னிலை

பீஹார் 5, ஒடிஷா 2 இடங்கள்: ராஜ்யசபா தேர்தலில் பாஜக முன்னிலை
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக இருந்த 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 26 இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பீஹாரில் ஐந்து, ஒடிஷாவில் நான்கு மற்றும் ஹரியானாவில் இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பீஹாரில் ஐக்கிய ஜனதா தள தலைவர் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஒடிஷாவில் நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மன்மோகன் சமல், சுஜீத் குமார் வெற்றி பெற்றனர். மேலும் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் திலீப் ராய் கடும் போட்டியில் வெற்றி பெற்றார். பிஜு ஜனதா தளத்தின் சில எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தது இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது. ஹரியானாவில் ஓட்டு ரகசியம் மீறப்பட்டதாக புகார் எழுந்ததால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருந்த ஆறு ராஜ்யசபா இடங்களும் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களால் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
1 நாட்கள் முன்பு
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
1 நாட்கள் முன்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
1 நாட்கள் முன்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்