உடனடி செய்தி

சிபிஎஸ்இ விடைத்தாள் கசிவு விவகாரம் | பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட நிர்வாகம்

சிபிஎஸ்இ விடைத்தாள் கசிவு விவகாரம் | பாதுகாப்பு குறைபாட்டை ஒப்புக்கொண்ட நிர்வாகம்
சிபிஎஸ்இ தேர்வு விடைத்தாள்கள் இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் அணுகக்கூடியதாக இருந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர், மாணவர்களின் விடைத்தாள்கள் மற்றும் மதிப்பீட்டு ஆவணங்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் கிளவுட் சேமிப்பகத்தில் இருந்ததாக குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த சிபிஎஸ்இ நிர்வாகம், சேவை வழங்குநரின் இணைய அமைப்பில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து புகார்கள் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு பலவீனங்கள் கண்டறியப்பட்டதும் அவற்றை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அரசு துறைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும், தற்போது முக்கிய பாதுகாப்பு பிரச்னைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ கூறியுள்ளது. இதற்கிடையில், விடைத்தாள் நகல் கோரிய பல மாணவர்களுக்கு இன்னும் நகல்கள் கிடைக்காததால், மறுமதிப்பீட்டு விண்ணப்ப செயல்முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
8 மணி நேரங்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
8 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
காங்கிரஸைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தி; த.வெ.க. கூட்டணியில் புதிய சலசலப்பு
8 மணி நேரங்கள் முன்பு
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
கோவில்களில் மொபைல் போன் தடை: பக்தர்கள் சிரமத்தால் விதிகளை மறுபரிசீலிக்க கோரிக்கை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்