சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய விவகாரம்: தி.மு.க. வீடியோ சர்ச்சை
வேலூர்: தமிழகம் முழுவதும் வரவிருக்கும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்துவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வீடியோவில், “காட்பாடி என்றாலே துரைமுருகன் ஐயா தான்”, “வாக்களிப்பீர் உதயசூரியன்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரத்தில், இரண்டு சிறுவர்கள் கட்சிக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியபடி ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ரேவதியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏழு சிறுவர்கள் பதாகைகள் ஏந்திய சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய தர்மேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்