'போதையில்லா தமிழகம்' மாநாடு இன்று பொள்ளாச்சியில்; 'வீ த லீடர்ஸ்' சார்பில் அண்ணாமலை பங்கேற்பு
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் நடைபெறும் 'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாடு இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரங்கில் சுமார் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், வெளியே இருந்தும் நிகழ்ச்சியை காண எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு நுழைவாயில் மற்றும் முகப்பு பகுதிகள் ஆழியாறு அணை, தென்னைத் தோப்புகள் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளது.
பா.ஜ.க.வில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலை தொடங்கிய 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் முதல் பெரிய பொதுமாநாடு என்பதால், தமிழகம் முழுவதும் இருந்து அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு, சமூக பொறுப்பு மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துகள் பகிரப்பட உள்ளதாக அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Alternate Excerpt
Alternate Meta Title
Alternate Meta Description
Alternate Meta Keywords
Alternate Meta Tags (Comma Separated)
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பில் தென் மாநிலங்கள் இணைப்பு; 'ஆப்பரேஷன் துபான்' திட்டம் விரிவாக்கம்
2 மணி நேரங்கள் முன்பு
பின்னணிப் பாடல் உலகின் ஜாம்பவான் எஸ். ஜானகி காலமானார்; இசை ரசிகர்கள் சோகத்தில்
2 மணி நேரங்கள் முன்பு
பதவி, 'சீட்' ஏமாற்றம்: காங்கிரஸிலிருந்து தவெக-வுக்கு நகரும் சிதம்பரம் ஆதரவாளர்கள்?
1 நாட்கள் முன்பு
'உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை' - அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆதங்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்