உடனடி செய்தி

பச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்

பச்சிளம் குழந்தை ராஜஸ்தானுக்கு கடத்த இருந்த கிருத்துவ பாதிரியார்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பச்சிளம் குழந்தை  ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் கிறிஸ்டி என்ற பெண், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை உடல்நலக்குறைவு காரணமாக அனுமதித்துள்ளார். குழந்தையின் தாய் என்று கூறியதால் கிறிஸ்டியின் வயதையும், உருவத்தையும் பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் கிறிஸ்டியை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ருக்குமணியாபுரத்தை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட 16 வயது சிறுமியுடைய குழந்தை என்றும், புளியங்குடியில் உள்ள சூர்யா என்ற தனியார் மருத்துவமனையில் பிறந்த அக்குழந்தை விலைக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த சூர்யா மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரின் ஓட்டுநராக வேலை செய்யும் இம்மானுவேல் என்பவர் கிறிஸ்டியின் சகோதரியின் கணவர் ஆவர். அவர் மூலம் தான் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

குழந்தையை கிறிஸ்டியும், ராஜஸ்தானை சேர்ந்த அவரது கணவரான பாதிரியார் வல்ராமும் ராஜஸ்தானுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவர் வல்ராம், இம்மானுவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஆட்சி மாற்ற சாத்தியம்
மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி தேர்தல்: கருத்துக்கணிப்பில் ஆட்சி மாற்ற சாத்தியம்
12 மணி நேரங்கள் முன்பு
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு: மீண்டும் திமுக ஆட்சி சாத்தியம், விஜய் கட்சி முன்னேற்றம் கவனம் ஈர்ப்பு
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு: மீண்டும் திமுக ஆட்சி சாத்தியம், விஜய் கட்சி முன்னேற்றம் கவனம் ஈர்ப்பு
12 மணி நேரங்கள் முன்பு
Senthil Balaji வழக்கு CBI-க்கு மாற்றம்: ₹397 கோடி மின்வாரிய கொள்முதல் சர்ச்சையில் உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு
Senthil Balaji வழக்கு CBI-க்கு மாற்றம்: ₹397 கோடி மின்வாரிய கொள்முதல் சர்ச்சையில் உயர் நீதிமன்ற அதிரடி உத்தரவு
12 மணி நேரங்கள் முன்பு
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
சென்னை தேர்தலில் 83.68% ஓட்டுப்பதிவு – 4.72 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்கவில்லை
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்