செய்திகள்
⚡ உடனடி செய்தி
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை அமைத்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் தலைமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைச் சுற்றிய மோதல் தீவிரமடைந்துள்ளது.
தேர்தலில் 80 இடங்களை வென்ற திரிணமுல் காங்கிரஸ் சார்பில் சோபன்தேவ் சட்டோபாத்யாயா எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆதரவு கடிதம் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட நிலையில், அதில் சில எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகள் போலியானவை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில், கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் நீக்கப்பட்டனர். பின்னர் ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான 60 எம்.எல்.ஏ.க்கள் அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்து தீர்மானத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் ரிதபிரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்துக்கு இடைக்கால தடை கோரி திரிணமுல் காங்கிரஸ் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், மனுவில் தலையிட தேவையான முகாந்திரம் இல்லை என்று நீதிபதி கிருஷ்ணா ராவ் கூறி, சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தார்.
மேலும், சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, இரு தரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கும், திரிணமுல் காங்கிரஸ் தலைமையிற்கும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
17 மணி நேரங்கள் முன்பு
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
18 மணி நேரங்கள் முன்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
1 நாட்கள் முன்பு
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று: கவர்னர் உரையுடன் தொடக்கம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்